என் மலர்
செய்திகள்

எம்.ஜி.ஆர். நகரில் 5-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் மன உளைச்சலில் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
போரூர்:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 5-வது மாடியில் வசித்து வந்தார் வசந்தா (வயது 63). கணவரை இழந்த இவர் மகள் லட்சுமியுடன் தங்கி இருந்தார்.
கடந்த 4மாதங்களுக்கு முன்பு வசந்தாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு வசந்தா வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் நள்ளிரவு 11 மணி அளவில் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை கண்டு அப்பகுதியில் குடியிருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
சென்னை எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 5-வது மாடியில் வசித்து வந்தார் வசந்தா (வயது 63). கணவரை இழந்த இவர் மகள் லட்சுமியுடன் தங்கி இருந்தார்.
கடந்த 4மாதங்களுக்கு முன்பு வசந்தாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு வசந்தா வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் நள்ளிரவு 11 மணி அளவில் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை கண்டு அப்பகுதியில் குடியிருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Next Story






