search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக்குவிப்பு புகார் - விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு
    X

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக்குவிப்பு புகார் - விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #chennaiHC #RajenthraBhalaji
    சென்னை:

    தமிழகத்தில் தற்போது பால்வளத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ராஜேந்திர பாலாஜி மீது மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சொத்துக்குவிப்பு புகார் அளித்திருந்தார். அமைச்சர் ஆன பிறகு அதிக அளவில் அவர் சொத்து சேர்த்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

    அவரது மனுவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றம் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.



    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில்  விசாரணை நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. #chennaiHC #RajenthraBhalaji
    Next Story
    ×