search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீர்த்த மழை
    X

    கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீர்த்த மழை

    கொடைக்கானலில் இன்று 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. #Rain

    பெருமாள்மலை:

    தென் மேற்கு பருவமழையின் அறிகுறியாக கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. மேலும் பகலில் நிலவும் வெப்பத்தின் தாக்கவும் குறைந்தே காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் குறைந்து இருந்தாலும் தற்போது பெய்து வரும் மழை குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யும் என பொதுமக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

    இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான சாரல் மழை பெய்தது. 10 மணிக்கு மேல் பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் சாலையில் நடந்து செல்ல முடியாத படியும், வாகனங்களை ஓட்ட முடியாதபடியும் மக்கள் அவதியடைந்தனர்.

    காற்று பலமாக வீசியதால் நகர் முழுவதும் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. பெருமாள் மலை, பூலத்தூர், கூக்கால், மன்னவனூர் போன்ற கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    மேல் மலை கிராமங்களில் பெய்த பலத்த மழையினால் பட்டானி, பீன்ஸ், உருளை போன்ற செடிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    பேரிஜம் ஏரிக்கு செல்லும் பகுதியில் மிகப் பெரிய மரம் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை அறுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். #Rain

    Next Story
    ×