என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழ வியாபாரி வீட்டில் ரூ.7½ லட்சம், 15 பவுன் நகை கொள்ளை - வாலிபர் கைவரிசை
Byமாலை மலர்8 Jun 2018 9:07 AM GMT (Updated: 8 Jun 2018 9:07 AM GMT)
ஆதம்பாக்கத்தில் பழ வியாபாரி வீட்டில் ரூ.7½ லட்சம், 15 பவுன் நகையை கொள்ளையடித்த வாலிபவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் வருமான வரி துறை காலனி 1-வது தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (29). இவர் தள்ளுவண்டியில் வைத்து பழ வியாபாரம் செய்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
எனவே ஒரு வீட்டில் தனியாக வாழ்கிறார். வீட்டை கவனித்துக் கொள்ள உதவியாளராக செஞ்சியை சேர்ந்த ஏழுமலை (50) என்பவரை தங்க வைத்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏழுமலையின் மகன் கார்த்தி (30) என்பவர் தனது தந்தையை பார்க்க வந்தார். பின்னர் இங்கேயே தங்கிவிட்டார்.
இந்த நிலையில், தர்மராஜ் நேற்று பழ வியாபாரத்துக்கு வெளியே சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பினார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்து உள்ளே பார்த்த போது அங்கு வைத்திருந்த ரூ.7½ லட்சம் ரொக்க பணத்தை காணவில்லை.
மேலும் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளும் ‘அபேஸ்’ செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவின் வீடியோ பதிவுகளை பார்வையிட்டனர். அதில் ஏழுமலையின் மகன் கார்த்தி தனது லுங்கிக்குள் பணம் மற்றும் நகைகளை மடித்து எடுத்து சென்றது தெரியவந்தது. எனவே அவற்றை கொள்ளையடித்தது இவர்தான் என கண்டு பிடிக்கப்பட்டது.
அவரை பல இடங்களிலும் போலீசார் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. எனவே அவரது தந்தை ஏழுமலையை பிடித்து போலீசார் செஞ்சிக்கு அழைத்து சென்றனர். அங்கும் கார்த்தி வரவில்லை. ஆகவே தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
ஆதம்பாக்கம் வருமான வரி துறை காலனி 1-வது தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (29). இவர் தள்ளுவண்டியில் வைத்து பழ வியாபாரம் செய்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
எனவே ஒரு வீட்டில் தனியாக வாழ்கிறார். வீட்டை கவனித்துக் கொள்ள உதவியாளராக செஞ்சியை சேர்ந்த ஏழுமலை (50) என்பவரை தங்க வைத்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏழுமலையின் மகன் கார்த்தி (30) என்பவர் தனது தந்தையை பார்க்க வந்தார். பின்னர் இங்கேயே தங்கிவிட்டார்.
இந்த நிலையில், தர்மராஜ் நேற்று பழ வியாபாரத்துக்கு வெளியே சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பினார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்து உள்ளே பார்த்த போது அங்கு வைத்திருந்த ரூ.7½ லட்சம் ரொக்க பணத்தை காணவில்லை.
மேலும் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளும் ‘அபேஸ்’ செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவின் வீடியோ பதிவுகளை பார்வையிட்டனர். அதில் ஏழுமலையின் மகன் கார்த்தி தனது லுங்கிக்குள் பணம் மற்றும் நகைகளை மடித்து எடுத்து சென்றது தெரியவந்தது. எனவே அவற்றை கொள்ளையடித்தது இவர்தான் என கண்டு பிடிக்கப்பட்டது.
அவரை பல இடங்களிலும் போலீசார் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. எனவே அவரது தந்தை ஏழுமலையை பிடித்து போலீசார் செஞ்சிக்கு அழைத்து சென்றனர். அங்கும் கார்த்தி வரவில்லை. ஆகவே தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X