என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பு: இலங்கை அகதி உள்பட 2 பேர் கைது
Byமாலை மலர்7 Jun 2018 1:56 PM GMT (Updated: 7 Jun 2018 1:56 PM GMT)
திருச்சியில் நடந்து சென்ற கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த இலங்கை அகதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:
திருச்சி பெரியகடைவீதி சுகாதார தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 19), கல்லூரி மாணவரான இவர் சம்பவத்தன்று கோட்டை ஸ்டேஷன் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் சுரேஷ்குமாரிடம் மெதுவாக பேச்சு கொடுத்தனர். பின்னர் இருவரும் சுரேஷ்குமாரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார் .
இதனைப் பார்த்த பொதுமக்கள் வாலிபர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செல்போனை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தவர்களில் ஒருவர் திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த நிஷா (வயது 21) கல்லூரி மாணவர் என்பதும் மற்றொருவர் இலங்கை அகதி என்பதும் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X