search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அருகே வீடு புகுந்து திருடிய கொள்ளையன் கைது
    X

    பாபநாசம் அருகே வீடு புகுந்து திருடிய கொள்ளையன் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாபநாசம் அருகே வீடு புகுந்து திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கோவில் தேவராயன் பேட்டையில் வசிப்பவர் நிவேதா (வயது 29). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவதன்று நிவேதா வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7¼ பவுன் நகையை திருடி சென்று விட்டான். இதன் மதிப்பு ரூ.1லட்சத்து 16 ஆயிரம் ஆகும். 

    இதுபற்றி நிவேதா பாபநாசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இனஸ்பெக்டர் நாக ரெத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மன்னார்குடி அண்ணாமலை நாதர் சன்னதி தெருவைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் மகன் பாண்டியன் (30) நிவேதா வீட்டில் நகையை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். 

    பாண்டியனை பாபநாசம் கோர்ட்டில் நீதிபதி ராஜசேகர் முன்னிலையில் ஆஜர் படுத்தி 15 நாள் காலில் திருச்சி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×