என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

பாபநாசம் அருகே வீடு புகுந்து திருடிய கொள்ளையன் கைது

பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கோவில் தேவராயன் பேட்டையில் வசிப்பவர் நிவேதா (வயது 29). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவதன்று நிவேதா வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7¼ பவுன் நகையை திருடி சென்று விட்டான். இதன் மதிப்பு ரூ.1லட்சத்து 16 ஆயிரம் ஆகும்.
இதுபற்றி நிவேதா பாபநாசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இனஸ்பெக்டர் நாக ரெத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மன்னார்குடி அண்ணாமலை நாதர் சன்னதி தெருவைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் மகன் பாண்டியன் (30) நிவேதா வீட்டில் நகையை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.
பாண்டியனை பாபநாசம் கோர்ட்டில் நீதிபதி ராஜசேகர் முன்னிலையில் ஆஜர் படுத்தி 15 நாள் காலில் திருச்சி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
