என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்தலக்குண்டு அருகே மாமியார் கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை
Byமாலை மலர்7 Jun 2018 10:31 AM GMT (Updated: 7 Jun 2018 10:33 AM GMT)
வத்தலக்குண்டு அருகே மாமியார் கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாமியாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு கோட்டைப்பட்டி தெருவை சேர்ந்தவர் அழகேஸ்வரி(24). இவருக்கும் ராமநாயக்கன் பட்டியை சேர்ந்த சத்யராஜ்(30) என்பவருக்கும் கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு இனியா(2) என்ற மகள் உள்ளார். அழகேஸ்வரி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். சத்யராஜ் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 2 வாரங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இதனிடையே மாமியார் வீட்டில் தங்கியிருந்த அழகேஸ்வரியை அவர் தகாத வார்த்தைகளால் பேசி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த சத்யராஜிடம் இதுகுறித்து அழகேஸ்வரி கூறினார். ஆனால் அவர் தாயை கண்டிக்காமல் விட்டுவிட்டார். இதனால் மனமுடைந்த அழகேஸ்வரி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் வழக்குபதிவு செய்து மாமியார் பத்மாவதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு கோட்டைப்பட்டி தெருவை சேர்ந்தவர் அழகேஸ்வரி(24). இவருக்கும் ராமநாயக்கன் பட்டியை சேர்ந்த சத்யராஜ்(30) என்பவருக்கும் கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு இனியா(2) என்ற மகள் உள்ளார். அழகேஸ்வரி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். சத்யராஜ் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 2 வாரங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இதனிடையே மாமியார் வீட்டில் தங்கியிருந்த அழகேஸ்வரியை அவர் தகாத வார்த்தைகளால் பேசி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த சத்யராஜிடம் இதுகுறித்து அழகேஸ்வரி கூறினார். ஆனால் அவர் தாயை கண்டிக்காமல் விட்டுவிட்டார். இதனால் மனமுடைந்த அழகேஸ்வரி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் வழக்குபதிவு செய்து மாமியார் பத்மாவதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X