என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் இன்று மாலை மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு
Byமாலை மலர்7 Jun 2018 5:38 AM GMT (Updated: 7 Jun 2018 5:38 AM GMT)
வெப்பசலனம் காரணமாக நேற்று போல் இன்றும் பிற்பகலிலும் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்து வந்தாலும் சென்னைக்கு மழை பாராமுகமாகவே இருந்தது. பக்கத்தில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் சென்னையில் மழை இல்லாததால் வெயில் கொளுத்தியது.
கத்திரி வெயில் முடிந்த பிறகும் சென்னையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. சொல்லப் போனால் கத்திரி வெயிலுக்கு பின்னர்தான் சென்னையில் வெயில் சுட்டெரித்தது. நேற்று அதிகபட்சமாக சென்னையில் 105 டிகிரி வெப்பம் நிலவியது. இதனால் பகலில் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இந்த மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னையின் அனைத்துப் பகுதியிலும் நல்ல மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையில் நுங்கம்பாக்கத்திலும், மீனம்பாக்கத்திலும் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வெப்பசலனம் காரணமாக இந்த மழை பெய்ததாகவும், நேற்று போல் இன்று பிற்பகலிலும் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain
தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்து வந்தாலும் சென்னைக்கு மழை பாராமுகமாகவே இருந்தது. பக்கத்தில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் சென்னையில் மழை இல்லாததால் வெயில் கொளுத்தியது.
கத்திரி வெயில் முடிந்த பிறகும் சென்னையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. சொல்லப் போனால் கத்திரி வெயிலுக்கு பின்னர்தான் சென்னையில் வெயில் சுட்டெரித்தது. நேற்று அதிகபட்சமாக சென்னையில் 105 டிகிரி வெப்பம் நிலவியது. இதனால் பகலில் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
ஆனால் பிற்பகல் 2 மணிக்கு திடீர் என்று மேகங்கள் திரண்டு மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழை கொட்டியது. மாலை வரை மழை தூறிக்கொண்டே இருந்தது.
சென்னையில் நுங்கம்பாக்கத்திலும், மீனம்பாக்கத்திலும் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வெப்பசலனம் காரணமாக இந்த மழை பெய்ததாகவும், நேற்று போல் இன்று பிற்பகலிலும் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X