search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காடையாம்பட்டி அருகே கோவில் மீது இடி தாக்கி சிலைகள் சேதம்
    X

    காடையாம்பட்டி அருகே கோவில் மீது இடி தாக்கி சிலைகள் சேதம்

    காடையாம்பட்டி பகுதியில் நேற்று இரவு இடி மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது கோவில் கோபுரத்தின் மீது இடி தாக்கியதில் சிலைகள் சேதம் அடைந்தன.
    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அருகே  ராக்கிபட்டி காலனி உள்ளது. இந்த பகுதியில்  300-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதன் மத்தியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெரியாண்டிச்சியம்மன் கோவில் கட்டப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது. கோவிலுக்கு பூசாரி ராஜா தினமும் பூஜை செய்து வருகிறார். 

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு காடையாம்பட்டி பகுதியில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது கோவில் கோபுரத்தின் மீது இடி தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த சிலைகள் சேதம் அடைந்தன. தகவல் அறிந்த வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவில் மீது இடி தாக்கி சிலை சேதம் அடைந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. 

    இதே போல் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை நிலவி வருகிறது. இதனால் சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக செல்வதால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் கூட்டடம் அலை மோதுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை பாதையில் ஆங்காங்கே நீர் வீழ்ச்சி தோன்றியுள்ளது. 

    இந்த நீர் வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் சிலர் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×