என் மலர்
செய்திகள்

சீர்காழி நகரில் குற்றங்களை தடுக்க 38 கண்காணிப்பு கேமிராக்கள் அமைப்பு- எஸ்.பி தகவல்
சீர்காழி நகரில் சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்கவும் குற்றங்களை தடுக்கவும் 38 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க உள்ளதாக எஸ்.பி. கூறியுள்ளார்.
சீர்காழி:
சீர்காழி காவல் நிலையத்தில் நாகப்பட்டிணம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சஞ்சய்சேகர் அலுவல் ஆய்வு பணி மேற்கொண்டார்.அப்போது காவல்நிலையத்தில் உள்ள பதிவேடுகள், குற்றபதிவேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்தார். வழக்கு விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நிருபர்களிடம் எஸ்.பி. தேஷ்முக்சஞ்சய் கூறுகையில், சீர்காழியில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையிலும், குற்ற நடவடிக்கைகளை தடுத்திடும் வகையிலும், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்கவும் 38 இடங்களில் உயர் அதி நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளது. அதன் கன்ட்ரோல்யூனிட் மற்றும் கண்காணிப்பு மானிட்டர்கள் என அனைத்து கணினி சேவைகளும் மகளிர் காவல்நிலையத்தில் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளது.
தேர்வு பெற்ற காவலர்களுக்கு பயிற்சி காலம் முடிந்தவுடன் உயர் காவல் அதிகாரிகளின் உத்தரவின்படி போதிய காவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். போக்குவரத்து நெருக்கடியை சீரமைக்கும் வகையில் சைரன் வைத்த இருசக்கரவாகனத்தில் ரோந்து போலீசார் நகர் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர் என்றார். ஆய்வின்போது டி.எஸ்.பி சேகர், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் உடனிருந்தனர்.#tamilnews
சீர்காழி காவல் நிலையத்தில் நாகப்பட்டிணம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சஞ்சய்சேகர் அலுவல் ஆய்வு பணி மேற்கொண்டார்.அப்போது காவல்நிலையத்தில் உள்ள பதிவேடுகள், குற்றபதிவேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்தார். வழக்கு விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நிருபர்களிடம் எஸ்.பி. தேஷ்முக்சஞ்சய் கூறுகையில், சீர்காழியில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையிலும், குற்ற நடவடிக்கைகளை தடுத்திடும் வகையிலும், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்கவும் 38 இடங்களில் உயர் அதி நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளது. அதன் கன்ட்ரோல்யூனிட் மற்றும் கண்காணிப்பு மானிட்டர்கள் என அனைத்து கணினி சேவைகளும் மகளிர் காவல்நிலையத்தில் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளது.
தேர்வு பெற்ற காவலர்களுக்கு பயிற்சி காலம் முடிந்தவுடன் உயர் காவல் அதிகாரிகளின் உத்தரவின்படி போதிய காவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். போக்குவரத்து நெருக்கடியை சீரமைக்கும் வகையில் சைரன் வைத்த இருசக்கரவாகனத்தில் ரோந்து போலீசார் நகர் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர் என்றார். ஆய்வின்போது டி.எஸ்.பி சேகர், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் உடனிருந்தனர்.#tamilnews
Next Story






