search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவாரம் அருகே பணம் தர மறுத்த முதியவருக்கு அரிவாள் வெட்டு
    X

    தேவாரம் அருகே பணம் தர மறுத்த முதியவருக்கு அரிவாள் வெட்டு

    தேவாரம் அருகே பணம் தர மறுத்த முதியவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    உத்தமபாளையம் அருகில் உள்ள அம்மாபட்டி காலனி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவர் தேவாரம் அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்த தோட்டத்துக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (25) என்பவர் அடிக்கடி வந்து செல்வார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. வடிவேலுவிடம் செலவுக்கு ராஜாபாண்டி பணம் வாங்கி வந்தார்.

    சம்பவத்தன்று தனது செலவுக்கு பணம் தருமாறு வடிவேலுவிடம் கேட்டார். அதற்கு தற்போது பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜபாண்டி அரிவாளால் அவரை வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    படுகாயம் அடைந்த வடிவேலு அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×