என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலிகிராமத்தில் தொழில் அதிபர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 6 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்31 May 2018 6:44 AM GMT (Updated: 31 May 2018 6:44 AM GMT)
சாலிகிராமத்தில் தொழில் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 6 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
அசோக் நகர் 48-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், தொழில் அதிபர். இவர் புதியதாக கார் வாங்குவதற்காக ரூ. 6 லட்சம் எடுத்துக் கொண்டு மற்றொரு காரில் சென்றார்.
சாலிகிராமம் கே.கே.சாலையில் உள்ள ஒரு கடைக்கு செல்வதற்காக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு சென்றார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.
காரின் பின்பக்க இருக்கையில் இருந்த ரூ. 6 லட்சத்துடன் சூட்கேஸ் திருடு போய் இருந்தது. அதில் விலை உயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் ஐபோன் ஆகியவையும் இருந்தன.
இது குறித்து விருகம்பாக்கம் போலீசில் சண்முகசுந்தரம் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சூட்கேசை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.
அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
அசோக் நகர் 48-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், தொழில் அதிபர். இவர் புதியதாக கார் வாங்குவதற்காக ரூ. 6 லட்சம் எடுத்துக் கொண்டு மற்றொரு காரில் சென்றார்.
சாலிகிராமம் கே.கே.சாலையில் உள்ள ஒரு கடைக்கு செல்வதற்காக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு சென்றார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.
காரின் பின்பக்க இருக்கையில் இருந்த ரூ. 6 லட்சத்துடன் சூட்கேஸ் திருடு போய் இருந்தது. அதில் விலை உயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் ஐபோன் ஆகியவையும் இருந்தன.
இது குறித்து விருகம்பாக்கம் போலீசில் சண்முகசுந்தரம் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சூட்கேசை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.
அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X