search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்தா சீனிவாசன் மரணம்: முதல்-அமைச்சர் எடப்பாடி இரங்கல்
    X

    முக்தா சீனிவாசன் மரணம்: முதல்-அமைச்சர் எடப்பாடி இரங்கல்

    பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் மரணமடைந்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.

    அவர் திரைப்படத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக தேசிய விருது, தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் போன்ற பல்வேறு விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். அவரது மறைவு, தமிழ் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Tamilnews
    Next Story
    ×