என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 2 வாலிபர்கள் பலி
Byமாலை மலர்30 May 2018 7:51 AM GMT (Updated: 30 May 2018 7:51 AM GMT)
சிவகாசி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள கண்டியாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் கார்த்தி (வயது22). பூசாரிபட்டியை சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துராஜ்(21).
இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை வெம்பக் கோட்டையில் இருந்து புறப்பட்டனர்.
வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது எழுவன்பச்சேரியைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த முத்துராஜ், வெங்கடேசை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி முத்துராஜ் பரிதாபமாக இறந்தார். ஊயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள வெங்கடேசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கண்டியாபுரத்தில் உள்ள கண்டியாரம்மன் கோவில் திருவிழா இன்று நடைபெறுகிறது. விழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விபத்தில் பலியானது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
சிவகாசி அருகே உள்ள கண்டியாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் கார்த்தி (வயது22). பூசாரிபட்டியை சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துராஜ்(21).
இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை வெம்பக் கோட்டையில் இருந்து புறப்பட்டனர்.
வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது எழுவன்பச்சேரியைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த முத்துராஜ், வெங்கடேசை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி முத்துராஜ் பரிதாபமாக இறந்தார். ஊயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள வெங்கடேசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கண்டியாபுரத்தில் உள்ள கண்டியாரம்மன் கோவில் திருவிழா இன்று நடைபெறுகிறது. விழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விபத்தில் பலியானது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X