என் மலர்
செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம்
தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டார்.#SterliteProtest
சென்னை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்குகள் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். #SterliteProtest
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்குகள் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். #SterliteProtest
Next Story






