search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவட்டார் அருகே  2 குழந்தைகளுடன் மாயமான பெண், போலீசில் தஞ்சம்
    X

    திருவட்டார் அருகே 2 குழந்தைகளுடன் மாயமான பெண், போலீசில் தஞ்சம்

    2 குழந்தைகளுடன் மாயமான பெண், போலீசில் தஞ்சம் அடைந்ததால் போலீசார் அப்பெண்ண பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே மாத்தூர் கோழிவிளையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவரது மனைவி சுதா (31). இவர்களுக்கு ஒரு மகன்,  மகள் உள்ளனர்.

    ராஜேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் சுதா கணவருக்கு போன் செய்து பேசினார். அப்போது தனக்கு கடன் இருப்பதால் ரூ.5 லட்சம் பணம் கொண்டுவரும்படி கூறினார். அதன்பின்பு அவர் 2 குழந்தைகளுடன் மாயமாகி விட்டார். இதுபற்றி உறவினர்கள் திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து சுதா மற்றும் அவரின் குழந்தைகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் தனது மகனை விட்டுசெல்லப்போவதாக சுதா, அவரது கணவருக்கு போனில் தெரிவித்தார். அவர் உறவினர் மூலம் இத்தகவலை போலீசாருக்கு தெரிவித்தார். போலீசார் மார்த்தாண்டம் சென்ற போது அங்கு சுதா வரவில்லை. 

    அதற்கு பதில் அவர் தக்கலை பஸ் நிலையத்தில் நேற்று மாலை தனது மகனை விட்டுவிட்டு சென்றார். போலீசார் அந்த சிறுவனை மீட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இரவு திருவட்டார் போலீசில் தஞ்சம் அடைந்தார். போலிசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று கூறினார். இதையடுத்து போலீசார் சுதாவின் பெற்றோரை அழைத்து அவர்களிடம் சுதாவை ஒப்படைத்தனர்.
    Next Story
    ×