என் மலர்
செய்திகள்

துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவையில் நாளை கடையடைப்பு
கோவை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவை மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் முத்துராஜ், பொருளாளர் பொன். தங்கமாரியப்பன்,மாநில துணை பொது செயலாளர் அபிபுல்லா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 100 நாட்களுக்கு மேலாக பல போராட்டத்தை தூத்துக்குடியை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள்,வணிகர் சங்கங்கள் செய்து கொண்டிருக்கிறது.
நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அப்பாவி பொதுமக்கள் 12 பேரை காவல் துறையினர் சுட்டு வீழ்த்தியதற்கும் அதற்கு துணை போன தமிழக அரசை கண்டித்து நாளை (24-ந் தேதி) முழு கடையடைப்பு நடத்த மாநில தலைவர் வெள்ளையன் வேண்டு கோள்விடுத்துள்ளார்.
இதனை ஏற்று கோவையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், அனைத்து வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.






