search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    சென்னை-திருவள்ளூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை-திருவள்ளூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று(புதன்கிழமை) முதல் 26-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * ஆவடியில் இருந்து அதிகாலை 2.50 மணிக்கு பட்டாபிராம் ராணுவ சைடிங் நோக்கி புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * பட்டாபிராம் ராணுவ சைடிங்கில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கு மூர்மார்க்கெட் நோக்கி புறப்படும் மின்சார ரெயில் பட்டாபிராம் ராணுவ சைடிங்-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×