search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே பஸ் மோதி மாணவி பலி: 2 பேர் படுகாயம்
    X

    விருத்தாசலம் அருகே பஸ் மோதி மாணவி பலி: 2 பேர் படுகாயம்

    விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் மாணவி பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள கார்கூடல் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் இலக்கியா (வயது 13), மகன் சிவகுரு (12) அருகில் உள்ள கம்மாபுரம் தனியார் பள்ளியில் இலக்கியா 7-ம் வகுப்பும், சிவகுரு 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். 

    பள்ளி விடுமுறையை முன்னிட்டு சின்னவடிவாடியில் உள்ள தனது மாமா சேகர் வீட்டிற்கு சென்றனர். இன்று மதியம் சேகர் மோட்டார் சைக்கிளில் இலக்கியா, சிவகுருவை ஆகியோரை அழைத்துக்கொண்டு கார்கூடல் வந்து கொண்டிருந்தார். பனையூர் பாலம் அருகே வந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இலக்கியா பரிதாபமாக இறந்தார். 

    படுகாயம் அடைந்த சேகர், சிவகுரு ஆகியோர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    Next Story
    ×