search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவரம் அருகே லாரி அதிபர் அடித்து கொலை- 3 வாலிபர்கள் கைது
    X

    மாதவரம் அருகே லாரி அதிபர் அடித்து கொலை- 3 வாலிபர்கள் கைது

    மாதவரம் அருகே வாய் தகராறில் லாரி அதிபர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    மாதவரம்:

    மாதவரம் மகாவீர் நகரை சேர்ந்தவர் பாலு (45). லாரி அதிபர். இவரது நண்பர் சிவா. இவர் மாதவரம் அருகேயுள்ள சாஸ்திரி நகரில் சொந்தமாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அங்கு அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கொளத்தூர் வஜ்ரவேல் நகரை சேர்ந்த சுரேந்திரன் (30) பெட்ரோல் போட தனது மனைவியுடன் அங்கு வந்தார்.

    அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். மனைவியை வைத்துக் கொண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டலாமா என பாலுவும், சிவாவும் அவருக்கு அறிவுரை கூறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்திரன் அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் அது கைகலப்பாக மாறியது. அதையடுத்து வீட்டுக்கு சென்ற சுரேந்திரன் மனைவியை இறக்கிவிட்டு 5 பேருடன் மீண்டும் பெட்ரோல் பங்க் வந்தார்.

    அங்கு பாலு மற்றும் சிவாவுடன் மீண்டும் தகராறு செய்து தாக்கினார். அவருடன் வந்தவர்கள் இருவரையும் மரக்கட்டை மற்றும் இரும்பு கம்பியல் தாக்கினர்.

    அதில் படுகாயம் அடைந்த பாலுவை ரெட்டேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பாலு பரிதாபமாக இறந்தார். சிவா சிகிச்சை பெற்று வருகிறார்.

    மாதவரம் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த அசார் அலி (25) ஜோதீஸ்வரன் (30), அசோக் (20) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சுரேந்திரன், அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×