search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியின் கழுத்தை அறுத்த வாலிபர் விஷம் குடித்தார்
    X

    கடலூரில் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியின் கழுத்தை அறுத்த வாலிபர் விஷம் குடித்தார்

    மனைவியின் கழுத்தை அறுத்து, வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பெரியார் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 36), பாத்திரக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி (32). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது.

    இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வேல்முருகனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    மேலும் மனைவி மாலதியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். நேற்று மாலை மாலதி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த வேல்முருகன் மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாலதியின் கழுத்தை அறுத்தார். மாலதி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    பின்னர் வேல்முருகன் போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று பயந்து, மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். 2 பேரும் வீட்டில் மயங்கி கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.

    உடனடியாக அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×