search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆற்காட்டில் சென்னை சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்தி பணம் பறிப்பு- 2 வாலிபர்கள் கைது
    X

    ஆற்காட்டில் சென்னை சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்தி பணம் பறிப்பு- 2 வாலிபர்கள் கைது

    வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் சென்னை சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்தி பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    ஆற்காடு:

    சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 20 பேர் ஊட்டிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டு வந்தனர்.

    வேலூர் மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையம் அருகே வேனை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றனர். அப்போது ஆற்காடு லேபர் தெருவை சேர்ந்த அஜித்குமார் (வயது 22), மணி (30) மற்றும் சிலர் சுற்றுலா பயணிகளுடன் தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துள்ளனர். மேலும் நவநீதம் (20), சரவணக்குமார் (32), தினேஷ் (19), தாஸ் (28) ஆகிய 4 பேரை கத்தியால் குத்தி உள்ளனர். அதில் காயமடைந்த அவர்கள் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து யுவராஜ் என்பவர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார், மணி ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×