என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் பேரணி - காங்கிரசார் 50 பேர் மீது போலீசார் வழக்கு
Byமாலை மலர்14 May 2018 11:24 AM GMT (Updated: 14 May 2018 11:24 AM GMT)
கன்னியாகுமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட காங்கிரசார் சார்பில் செயல் வீரர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குமரி மாவட்டம் வருகை தந்தார்.
குமரி மேற்கு மாவட்டத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் நாகர்கோவிலுக்கு காரில் வந்துகொண்டிருந்தார். அவருக்கு தொண்டர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் ஒரு பகுதியாக திங்கள்நகர் ரவுண்டானாவில் இருந்து கட்சி தொண்டர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினார்கள்.
இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. மேலும் போலீசார் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்லக்கூடாது எனவும் கூறியிருந்தனர். ஆனால் தடையை மீறி கட்சி நிர்வாகிகள் திங்கள்நகர் ரவுண்டானாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசரின் வாகனத்திற்கு பின்னால் பேரணியாக வந்தனர்.
இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஞான சிகாமணி ஆகியோர் குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெரால்டு கென்னடி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ் உள்பட 50 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X