என் மலர்

    செய்திகள்

    திருமண செலவுக்கு பணம் கிடைக்காததால் புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை
    X

    திருமண செலவுக்கு பணம் கிடைக்காததால் புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருமண செலவுக்கு பணம் இல்லாததால் புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பூர்:

    திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்தவர் ரூபேஷ் குமார் (31). இவர் திருப்பூர் கே.வி.ஆர். நகரில் அறை எடுத்து தங்கி எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் உறவினர் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. வருகிற 20-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர். திருமண செலவுக்காக ரூபேஷ் குமார் சிலரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனையில் இருந்து வந்தார். தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருப்பூர் மத்திய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரூபேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    Next Story
    ×