என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னாள் எம்.எல்.ஏ. சாமி உடல்நலக்குறைவால் காலமானார்
Byமாலை மலர்11 May 2018 4:53 AM GMT (Updated: 11 May 2018 4:53 AM GMT)
மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு டி.டி.வி. தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Rsamy #RIP
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சாமி. புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நோய் பாதிப்பு அதிகமாகவே சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து அவரது உடல் மேலூரில் உள்ள வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மனைவி, மகளுடன் நேரில் சென்று சாமி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் மேலூர் மில்கேட் அருகே உள்ள கூலூத்துப்பட்டியில் உள்ள சுடுகாட்டில் சாமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.
மறைந்த சாமி மேலூர் தொகுதியில் 2001, 2006, 2011 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர். ஜெயலலிதா மறைவுக்கு பின் தினகரன் அணியில் இணைந்து அமைப்பு செயலாளராக பணியாற்றி வந்தார். #Rsamy #RIP
மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சாமி. புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நோய் பாதிப்பு அதிகமாகவே சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து அவரது உடல் மேலூரில் உள்ள வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மனைவி, மகளுடன் நேரில் சென்று சாமி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து மேலூர் பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிர முகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக வந்து சாமி எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த சாமி மேலூர் தொகுதியில் 2001, 2006, 2011 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர். ஜெயலலிதா மறைவுக்கு பின் தினகரன் அணியில் இணைந்து அமைப்பு செயலாளராக பணியாற்றி வந்தார். #Rsamy #RIP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X