என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஜகுபர் அலியை வைகோ சந்தித்து ஆறுதல் கூறியபோது எடுத்தபடம்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு- தற்கொலைக்கு முயன்ற ம.தி.மு.க. தொண்டர்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சை பெற்று வரும் ம.தி.மு.க. தொண்டரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #MDMK #Vaiko #NEET
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள முனியன்வயல் பகுதியைச் சேர்ந்தவர் ஜகுபர் அலி (வயது 50). இவரது மனைவி சகர்பானு. தலால் ஆஸ்மி, ஜமீனாபானு என்ற 2 மகள்கள் உள்ளனர்.
ம.தி.மு.க.வின் தீவிர தொண்டரான ஜகுபர் அலி வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். பின்னர் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம், காவிரி விவகாரம் போன்ற பிரச்சனைகளில் கட்சி சார்பில் நடைபெற்று வந்த போராட்டங்களில் பங்கேற்று வந்தார். நேற்று வீட்டில் இருந்த ஜகுபர்அலி, தனது குடும்பத்தினரிடம் நீட் தேர்வு குளறுபடி குறித்து கவலையுடன் பேசியுள்ளார்.
பின்னர் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற அவர், திடீரென துண்டால் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததோடு, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஜகுபர்அலி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீட் தேர்வு விவகாரத்தினால் ஜகுபர் அலி தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தனது கட்சி தொண்டர் ஜகுபர்அலி தற்கொலைக்கு முயன்ற தகவல் அறிந்ததும், நேற்று நள்ளிரவு தஞ்சையில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் ஜகுபர் அலியை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

சமீப காலமாக நியூட்ரினோ, காவிரி விவகாரம், நீட் பிரச்சனை தொடர்பாக பல இளைஞர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இது வேதனைக்குரியதாக உள்ளது. இளைஞர்கள் தங்களுடைய உயிர்களை மாய்த்து கொள்ளக்கூடாது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. போராடுவோம், வாழ்ந்து போராடுவோம்.
மத்திய அரசு தமிழகத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வு என்பது தமிழகத்தின் சமூக நீதிக்கான கேடு. தமிழகத்திலா இல்லை தேர்வு மையங்கள். மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடுதான் திட்டமிட்டு தேர்வு மையங்களை வேறு மாநிலத்தில் அமைத்து மாணவர்களை மத்திய அரசு பழி வாங்கியுள்ளது.
தற்போது மனித உரிமை ஆணையம் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை தற்போது கூறமுடியாது. ஆனால் நீட் தமிழகத்திற்கு தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் இருந்து வைகோ நடைபயணம் மேற்கொண்டபோது ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்தார். மேலும் விருதுநகரில் வைகோவின் உறவினர் ஒருவர் தற்கொலை செய்தார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக புதுக்கோட்டையில் ம.தி.மு.க. தொண்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #MDMK #Vaiko #NEET #NEETExam
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள முனியன்வயல் பகுதியைச் சேர்ந்தவர் ஜகுபர் அலி (வயது 50). இவரது மனைவி சகர்பானு. தலால் ஆஸ்மி, ஜமீனாபானு என்ற 2 மகள்கள் உள்ளனர்.
ம.தி.மு.க.வின் தீவிர தொண்டரான ஜகுபர் அலி வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். பின்னர் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம், காவிரி விவகாரம் போன்ற பிரச்சனைகளில் கட்சி சார்பில் நடைபெற்று வந்த போராட்டங்களில் பங்கேற்று வந்தார். நேற்று வீட்டில் இருந்த ஜகுபர்அலி, தனது குடும்பத்தினரிடம் நீட் தேர்வு குளறுபடி குறித்து கவலையுடன் பேசியுள்ளார்.
பின்னர் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற அவர், திடீரென துண்டால் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததோடு, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஜகுபர்அலி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீட் தேர்வு விவகாரத்தினால் ஜகுபர் அலி தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தனது கட்சி தொண்டர் ஜகுபர்அலி தற்கொலைக்கு முயன்ற தகவல் அறிந்ததும், நேற்று நள்ளிரவு தஞ்சையில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் ஜகுபர் அலியை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

சமீப காலமாக நியூட்ரினோ, காவிரி விவகாரம், நீட் பிரச்சனை தொடர்பாக பல இளைஞர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இது வேதனைக்குரியதாக உள்ளது. இளைஞர்கள் தங்களுடைய உயிர்களை மாய்த்து கொள்ளக்கூடாது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. போராடுவோம், வாழ்ந்து போராடுவோம்.
மத்திய அரசு தமிழகத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வு என்பது தமிழகத்தின் சமூக நீதிக்கான கேடு. தமிழகத்திலா இல்லை தேர்வு மையங்கள். மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடுதான் திட்டமிட்டு தேர்வு மையங்களை வேறு மாநிலத்தில் அமைத்து மாணவர்களை மத்திய அரசு பழி வாங்கியுள்ளது.
தற்போது மனித உரிமை ஆணையம் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை தற்போது கூறமுடியாது. ஆனால் நீட் தமிழகத்திற்கு தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் இருந்து வைகோ நடைபயணம் மேற்கொண்டபோது ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்தார். மேலும் விருதுநகரில் வைகோவின் உறவினர் ஒருவர் தற்கொலை செய்தார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக புதுக்கோட்டையில் ம.தி.மு.க. தொண்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #MDMK #Vaiko #NEET #NEETExam
Next Story






