என் மலர்
செய்திகள்

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு வரும் தண்ணீரில் சாயத்தண்ணீர் கலப்பு - விவசாயிகள் குற்றச்சாட்டு
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு மதகு வழியாக திறந்துவிடப்பட்ட தண்ணீரில் சாயல்கழிவு கலந்து வருவதாக விவாசயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு அருகே மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவிவரும் சூழ்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் உயிர்நீராக 10 நாள்களுக்கு ஒற்றைப்படை மதகு பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறக்கப்பட்டு, 5 நாட்களாகியும் இன்னும் கடைக்கோடி பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்றும், பகலில் நன்றாக வரும் தண்ணீர் அதிகாலை முதல் காலை 10மணிவரை நுரையுடன் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ராக்கியாபாளையம் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
தண்ணீர் திறக்கப்பட்ட நாள் மட்டுமே வாய்க்கால் நிரம்பி வந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து தற்போது மிகவும் குறைவாக வருகிறது. பட்டாஸ்பாளி பகுதியில் இருந்து படிப்படியாக குறைந்து தற்போது கோவில்பாளையம் பகுதிவரை மட்டுமே தண்ணீர் செல்கிறது. அதற்கு பிறகு உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில்லை. மேலே உள்ள மதகுகளில் மரங்கள் மற்றும் தென்னைமரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு அடைத்து தண்ணீரை தேக்கி விடுகின்றனர். இதனால் கடைக்கோடி விவசாயிகள் கடும் பாதிப்படைகின்றனர். மேலும் இரவில் வாய்காலில் சாயக் கழிவுகளை திறந்துவிட்டு விடுகின்றனர்.
அதிகாலை முதல் தண்ணீர் நுரையுடன் கடும் துர்நாற்றத்துடன் வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, சாயக்கழிவுகள் கலக்காமல் தடுக்கவேண்டும். மேலும், இரவில் மதகுகளில் மரம் மட்டைகளை விட்டு தடுக்காமல் தண்ணீர் முழுமையாக கடைக்கோடிக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிர்தண்ணீர் விடும் காலத்தை இன்னும் 10நாள்களுக்கு நீடிக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
ஈரோடு அருகே மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவிவரும் சூழ்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் உயிர்நீராக 10 நாள்களுக்கு ஒற்றைப்படை மதகு பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறக்கப்பட்டு, 5 நாட்களாகியும் இன்னும் கடைக்கோடி பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்றும், பகலில் நன்றாக வரும் தண்ணீர் அதிகாலை முதல் காலை 10மணிவரை நுரையுடன் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ராக்கியாபாளையம் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
தண்ணீர் திறக்கப்பட்ட நாள் மட்டுமே வாய்க்கால் நிரம்பி வந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து தற்போது மிகவும் குறைவாக வருகிறது. பட்டாஸ்பாளி பகுதியில் இருந்து படிப்படியாக குறைந்து தற்போது கோவில்பாளையம் பகுதிவரை மட்டுமே தண்ணீர் செல்கிறது. அதற்கு பிறகு உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில்லை. மேலே உள்ள மதகுகளில் மரங்கள் மற்றும் தென்னைமரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு அடைத்து தண்ணீரை தேக்கி விடுகின்றனர். இதனால் கடைக்கோடி விவசாயிகள் கடும் பாதிப்படைகின்றனர். மேலும் இரவில் வாய்காலில் சாயக் கழிவுகளை திறந்துவிட்டு விடுகின்றனர்.
அதிகாலை முதல் தண்ணீர் நுரையுடன் கடும் துர்நாற்றத்துடன் வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, சாயக்கழிவுகள் கலக்காமல் தடுக்கவேண்டும். மேலும், இரவில் மதகுகளில் மரம் மட்டைகளை விட்டு தடுக்காமல் தண்ணீர் முழுமையாக கடைக்கோடிக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிர்தண்ணீர் விடும் காலத்தை இன்னும் 10நாள்களுக்கு நீடிக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Next Story






