என் மலர்
செய்திகள்

ஈரோடு மாநகர் பகுதியில் ரூ.7 கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணிகள்
ஈரோடு மாநகர் பகுதியில் ரூ.7 கோடி செலவில் திட்ட பணிகளுக்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு நசியனூர் ரோட்டில் சம்பத்நகர் முதல் வில்லரசம்பட்டி நால்ரோடு வரை சாலையின் இருபுறமும் அகலப்படுத்தி தார்ரோடு போட ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஈரோடு கலைமகள் தொடக்க பள்ளிக்கூடத்தில் ரூ.24 லட்சம் செலவில் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டவும், முத்துகருப்பணன் வீதியில் ரூ.25 லட்சம் செலவில் தார்ரோடு போடவும், பெரியார் நகரில் ரூ.43 லட்சம் செலவில் புதிதாக பூங்கா அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மொத்தம் ரூ.6 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ள வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி தலைமை தாங்கினார். தாசில்தார் அமுதா முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் மனோகரன், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
ஈரோடு நசியனூர் ரோட்டில் சம்பத்நகர் முதல் வில்லரசம்பட்டி நால்ரோடு வரை சாலையின் இருபுறமும் அகலப்படுத்தி தார்ரோடு போட ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஈரோடு கலைமகள் தொடக்க பள்ளிக்கூடத்தில் ரூ.24 லட்சம் செலவில் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டவும், முத்துகருப்பணன் வீதியில் ரூ.25 லட்சம் செலவில் தார்ரோடு போடவும், பெரியார் நகரில் ரூ.43 லட்சம் செலவில் புதிதாக பூங்கா அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மொத்தம் ரூ.6 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ள வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி தலைமை தாங்கினார். தாசில்தார் அமுதா முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் மனோகரன், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story






