என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
    X

    பண்ருட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

    பண்ருட்டி அருகே நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி தண்ணீர் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வேகாகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது26) விவசாயி. இவர் இன்று காலை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தனது குடும்பத்தினருடன் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த நிலத்தின் வழியாக பாம்பு ஒன்று சென்றது. இதை பார்த்த கோபாலகிருஷ்ணன் அந்த பாம்பு எங்கு செல்கிறது என்று பார்ப்பதற்காக அதை பின்தொடர்ந்து சென்றார். கோபால கிருஷ்ணனின் நிலத்தின் அருகில் உள்ள ராஜி என்பவரது நிலத்தின் 100 அடி கிணற்றுக்குள் அந்த பாம்பு சென்றது.

    அந்த கிணற்றை கோபாலகிருஷ்ணன் எட்டிப்பார்த்தார் அப்போது அவர் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். தண்ணீரில் தத்தளித்த கோபால கிருஷ்ணனை அவரது உறவினர்கள் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சிறிது நேரத்தில் கோபால கிருஷ்ணன் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவல் அறிந்த பண்ருட்டி மற்றும் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோபாலகிருண்ணனின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கடாம்புலியூர் இன்ஸ் பெக்டர் குமரய்யா, சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×