என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
எர்ணாவூர் நாராயணன் பிறந்த நாள் - சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மரியாதை
By
மாலை மலர்5 May 2018 12:20 PM GMT (Updated: 5 May 2018 12:20 PM GMT)

எர்ணாவூர் நாராயணன் தனது பிறந்த நாளையொட்டி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவொற்றியூர்:
சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தனது 62-வது பிறந்த நாளை இன்று தனது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
முன்னதாக வண்ணாரப்பேட்டையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் போயஸ் தோட்டத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறந்த நாளையொட்டி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாநில இளைஞரணி துணை செயலாளர் மணலி பாலசேகர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்க தேர் இழுத்தனர்.
தண்டு மாரியம்மன் கோவிலில் முத்துக்கனி தலைமையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. சமத்துவ மக்கள் கழக மகளிரணி சார்பில் 62 சீர்வரிசை வழங்கப்பட்டது.
எர்ணாவூர் நாராயணனுக்கு மனைவி லதா நாராயணன், மருமகன்கள் வருண்குமார், கே.ஏ.எஸ்.ஆர்.பிரபு, மகன் கார்த்தி, மகள்கள் பாப்பாத்தி, ஷகிலா, மருமகள் உஷா மற்றும் பேரன், பேத்திகள், மாநில பொதுச்செயலாளர் கு.இளஞ்சேரன், பொருளாளர் எம்.கண்ணன், நாடார் பேரவை கரு.சின்னதுரை, வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மா. சுரேஷ்பாலாஜி, தொழிற் சங்க அமைப்பு செயலாளர் ஜஸ்டின் மற்றும் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பல்வேறு கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தனது 62-வது பிறந்த நாளை இன்று தனது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
முன்னதாக வண்ணாரப்பேட்டையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் போயஸ் தோட்டத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறந்த நாளையொட்டி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாநில இளைஞரணி துணை செயலாளர் மணலி பாலசேகர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்க தேர் இழுத்தனர்.
தண்டு மாரியம்மன் கோவிலில் முத்துக்கனி தலைமையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. சமத்துவ மக்கள் கழக மகளிரணி சார்பில் 62 சீர்வரிசை வழங்கப்பட்டது.
எர்ணாவூர் நாராயணனுக்கு மனைவி லதா நாராயணன், மருமகன்கள் வருண்குமார், கே.ஏ.எஸ்.ஆர்.பிரபு, மகன் கார்த்தி, மகள்கள் பாப்பாத்தி, ஷகிலா, மருமகள் உஷா மற்றும் பேரன், பேத்திகள், மாநில பொதுச்செயலாளர் கு.இளஞ்சேரன், பொருளாளர் எம்.கண்ணன், நாடார் பேரவை கரு.சின்னதுரை, வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மா. சுரேஷ்பாலாஜி, தொழிற் சங்க அமைப்பு செயலாளர் ஜஸ்டின் மற்றும் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பல்வேறு கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
