என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்வெண்ணி அருகே விபத்து -கல்லூரி விரிவுரையாளர் உள்பட 2 பேர் பலி
    X

    கோவில்வெண்ணி அருகே விபத்து -கல்லூரி விரிவுரையாளர் உள்பட 2 பேர் பலி

    கோவில்வெண்ணி அருகே விபத்தில் கல்லூரி விரிவுரையாளர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம் அருகே உள்ள கோவில் வெண்ணி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 50). இவர் தஞ்சையில் உள்ள அரசு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினரான குணசேகரன் (46). இவர் முன்னாள் ராணுவ வீரர்.

    இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டைக்கு வந்து விட்டு மீண்டும் கோவில் வெண்ணிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கோவில் வெண்ணி அருகே இவர்கள் சென்று கொண்டிருக்கும் போது திருவாரூர் - தஞ்சை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். சாமிநான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த குணசேகரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குணசேகரனும் இறந்து விட்டார்.

    இந்த சம்பவம் குறித்து நீடாமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 2 பேரின் உடலைையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×