search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே டிராக்டர் சக்கரம் ஏறி பெண் பலி
    X

    வேதாரண்யம் அருகே டிராக்டர் சக்கரம் ஏறி பெண் பலி

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே டிராக்டர் சக்கம் ஏறி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தலைஞாயிறு:

    வேதாரண்யம் அடுத்த செட்டிபுலம் தியாகராஜபுரம் வீரமணி என்பவரது மனைவி கவிதா (வயது30). இவர்களுக்கு 2 பெண் குழந்தையும், 1 ஆண் குழந்தையும் உள்ளனர். வீரமணி மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கவிதா உறவினர் ஒருவருடன் வாரசந்தைக்கு காய்கறிகள் வாங்கி வர மொபட்டில் சென்றார். கரியாப்பட்டினம் கீழக்காடு என்கிற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஜல்லி ஏற்றி சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து கவிதா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே கவிதா பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கரியாப்பட்டினம் போலீசார் இறந்த கவிதாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×