என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிதம்பரம் அருகே பேராசிரியர் வீட்டில் ரூ.2 லட்சம் நகை திருட்டு
Byமாலை மலர்2 May 2018 4:18 PM GMT (Updated: 2 May 2018 4:18 PM GMT)
சிதம்பரம் அருகே பேராசிரியர் வீட்டில் ரூ.2 லட்சம் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி அபிராமி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜா (வயது 43). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் உதவி பேராசிரியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவரை பல்கலைக்கழக நிர்வாகம் பரமக் குடி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு இடமாற்றம் செய்தது.
இதையடுத்து ராஜா பரமக்குடி அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராக பொறுப்பேற்று அங்கேயே குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது சி.கொத்தங்குடியில் உள்ள தனது வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜா தனது குடும்பத்துடன் சி.கொத்தங்குடியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதில் பதறிய அவர், உடனே உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை சோதனை செய்த போது, அதில் இருந்த 10¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருடுபோன நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 லட்சமாகும்.
இது குறித்து ராஜா சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மர்மநபர்களின் ரேகைகளை சேகரித்துச் சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி அபிராமி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜா (வயது 43). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் உதவி பேராசிரியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவரை பல்கலைக்கழக நிர்வாகம் பரமக் குடி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு இடமாற்றம் செய்தது.
இதையடுத்து ராஜா பரமக்குடி அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராக பொறுப்பேற்று அங்கேயே குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது சி.கொத்தங்குடியில் உள்ள தனது வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜா தனது குடும்பத்துடன் சி.கொத்தங்குடியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதில் பதறிய அவர், உடனே உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை சோதனை செய்த போது, அதில் இருந்த 10¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருடுபோன நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 லட்சமாகும்.
இது குறித்து ராஜா சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மர்மநபர்களின் ரேகைகளை சேகரித்துச் சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X