search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது மர்ம கும்பல் தாக்குதல்
    X

    நாகை அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது மர்ம கும்பல் தாக்குதல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாகை அருகே இட பிரச்சனை காரணமாக இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது மர்ம கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை அடுத்த சிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஆர்.பார்த்திபன். இவர் நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சியின் செயலாளராக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு நாகை அடுத்த பொரவாச்சேரி என்ற இடத்தில் பார்த்திபன், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3-க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் திடீரென பார்த்திபனை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் சரமாரியாக பார்த்திபனை தாக்கினர். இதில் பார்த்திபன் பலத்த காயமடைந்து நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    காயம் அடைந்த பார்த்திபன், நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி நாகை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், இட பிரச்சினை காரணமாக பார்த்திபன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சாமிநாதன் , நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்திபனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறும் போது, பார்த்திபன் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை உடனடியாக போலீசார் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றார்.

    Next Story
    ×