என் மலர்
செய்திகள்

கடலூரில் அமைச்சர் சி.வி.சண்முகம் உருவபொம்மை எரிப்பு
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று மாலை அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அவதூரறாக பேசியதாக கூறப்படுகிறது.
கடலூர் நகர தி.மு.க. அலுவலகம் முன்பு இன்று காலை நகர செயலாளர் ராஜா தலைமையில் தி.மு.க. வினர் திரண்டனர். பின்னர் அவர்கள் கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலினை அவதூராக பேசிய சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை எடுத்து சென்றனர். கடலூர் பாரதிசாலையில் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட பொருளாளர் குணசேகரன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, நிர்வாகிகள் கணேசன், ராஜேந்திரன், சண்முகம், ராஜா, அகஸ்டீன் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுநகர் போலீசார் விரைந்து சென்று உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
அமைச்சர் சி.வி.சண்முகம் உருவபொம்மையை தி.மு.க.வினர் தீவைத்து எரித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






