என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெசன்ட் நகரில் வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்களுக்கு தர்மஅடி
Byமாலை மலர்23 April 2018 11:03 AM GMT (Updated: 23 April 2018 11:03 AM GMT)
சென்னை பெசன்ட் நகரில் வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்களை மடக்கி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
திருவான்மியூர்:
சென்னை, பெசன்ட்நகர் ஓடைக்குப்பம், வேளாங்கண்ணி தெருவை சேர்ந்தவர் ரகுபதி. நேற்று இரவு அவர் வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கினார்.
நள்ளிரவில் வந்த 2 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை திருடிக் கொண்டு தப்பி செல்ல முயன்றனர்.
சத்தம் கேட்டு எழுந்த ரகுபதி கொள்ளையர்கள் நிற்பதை கண்டு கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கொள்ளையர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த குமார், வசந்த் என்பது தெரிந்தது.
சென்னை செனாய்நகர் 8-வது தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் மாரியப்பராஜ். இன்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. கடையில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர்.
இதேபோல் அருகில் உள்ள மருந்து கடையில் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.
சென்னை, பெசன்ட்நகர் ஓடைக்குப்பம், வேளாங்கண்ணி தெருவை சேர்ந்தவர் ரகுபதி. நேற்று இரவு அவர் வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கினார்.
நள்ளிரவில் வந்த 2 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை திருடிக் கொண்டு தப்பி செல்ல முயன்றனர்.
சத்தம் கேட்டு எழுந்த ரகுபதி கொள்ளையர்கள் நிற்பதை கண்டு கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கொள்ளையர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த குமார், வசந்த் என்பது தெரிந்தது.
சென்னை செனாய்நகர் 8-வது தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் மாரியப்பராஜ். இன்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. கடையில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர்.
இதேபோல் அருகில் உள்ள மருந்து கடையில் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X