என் மலர்
செய்திகள்

நெய்வேலி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு
நெய்வேலி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள கீழ்வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 20). இவர் தனது நண்பருடன் மோட்டார்சைக்கிளில் நெய்வேலி இந்திராநகர் எம்.ஆர்.கே.சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது 4 பேர் மோட்டார் சைக்கிளை வழி மறித்தனர்.
பின்னர் அவர்கள் துரைராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கட்டையால் தாக்கி விட்டு சென்று விட்டனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த துரைராஜ் என்.எல்.சி.பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்த அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.
Next Story






