என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    புதுக்கோட்டையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மின்வாரிய மேற்பொறியாளர் அலுவலகம் முன்பு, புதுக்கோட்டையில் கடந்த 15 வருடங்களாக பணிபுரிந்து வரும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், குறைந்த பட்ச ஊதியம் ரூ.380 வழங்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் சுந்தர வடிவேலு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். #Tamilnews
    Next Story
    ×