என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே ஆட்டோ டிரைவர் தீக்குளித்து பலி
    X

    ஈரோடு அருகே ஆட்டோ டிரைவர் தீக்குளித்து பலி

    ஈரோடு அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் தஜ்மீர் (வயது30). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பெபினா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    தஜ்மீருக்கும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பெபினா கோபித்து கொண்டு கேரளாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். தஜ்மீர் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். கடந்த 18-ந் தேதி தஜ்மீர் வீட்டில் இருந்தபோது வாழ்க்கையில் வெறுப்படைந்து மண்ணெயை உடம்பில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    அவரது அலறல் சத்தமும், வீட்டில் இருந்து கரும்புகை அதிக அளவில் வெளியானதை கண்டும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று தஜ்மீர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து தஜ்மீரின் மனைவி மற்றும் உறவினர்கள் வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. இன்று அவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×