என் மலர்tooltip icon

    செய்திகள்

    காளையார்கோவிலில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
    X

    காளையார்கோவிலில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

    கடையின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    சிவகங்கை:

    காளையார் கோவில் அருகே உள்ள புலியடி தம்பத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 40). இவர் அந்தப்பகுதியில் மெடிக்கல் மற்றும் குளிர் பானக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடைகளை பூட்டிச் சென்றார்.

    நள்ளிரவில் யாரோ மர்ம மனிதர்கள் அந்த கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

    மறுநாள் காலை கடை திறக்க வந்த தண்டபாணி கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. காளையார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கடைகளில் இருந்த ரூ. 48 ஆயிரம் மற்றும் ஒரு கிராம் தங்கம் கொள்ளை போயிருந்ததாக தண்டபாணி புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×