என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒ.எம்.ஆர். அருகே லாரி மோதி என்ஜினீயர் பலி
    X

    ஒ.எம்.ஆர். அருகே லாரி மோதி என்ஜினீயர் பலி

    ஒ.எம்.ஆர். சாலையில் விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் ஆனந்த் ஒ.எம்,ஆர் சாலையில் தனியார் சாப்ட்வர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இரவு வேலை முடித்து ஒ.எம்.ஆர். சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் ஆனந்த் சென்றார்.

    அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. 30 மீட்டர் தூரத்துக்கு மோட்டார் சைக்கிளுடன் ஆனந்த் இழுத்து செல்லப்பட்டார். இதில் ஆனந்த் உடல் சிதறி பலியானார்.

    சோழிங்கநல்லூர் போக்கு வரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவின் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×