என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே இளநீர் வியாபாரியை அரிவாளால் வெட்டிய கும்பல்
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே இளநீர் வியாபாரியை அரிவாளால் வெட்டிய கும்பல்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே இளநீர் வியாபாரியை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.

    இன்று காலை அவர் வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெங்க டேசனை சரமாரியாக வெட்டினார்கள்.

    இதில் தலை, கழுத்து, கைகளில் வெட்டுப்பட்ட வெங்கடேசன் அலறினார். சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவருவதை பார்த்ததும் 5 பேரும் தப்பி ஓடி விட்டார்கள்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த வெங்கடேசனை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    வெங்கடேச னுக்கு யாருடனாவது முன் விரோதம் உள்ளதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரித்து வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×