என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி அருகே தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சாம்பல்
Byமாலை மலர்1 March 2018 10:09 AM GMT (Updated: 1 March 2018 10:09 AM GMT)
பொள்ளாச்சி அருகே தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள நாலாம் மூலை சுங்கம் பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி முன் புறம் 10 வீடுகள் உள்ளது. இந்த வீடுகள் ஓடு, சிமெண்ட் ஆஸ்பெஸ்டாஸ் ஆகியவற்றால் அமைக்கப்பட்டு இருந்தது.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவியது. இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் நாகராஜ், சரஸ்வதி, தங்கவேல், ரவி, மாரியம்மாள் ஆகியோர் வீடுகள் எரிந்து சேதம் அடைந்தது.
தீ விபத்தில் அங்கிருந்த வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மொபட், 3 பவுன் நகை, கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. சேத மதிப்பு ரூ. 1.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பொள்ளாச்சி அருகே உள்ள நாலாம் மூலை சுங்கம் பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி முன் புறம் 10 வீடுகள் உள்ளது. இந்த வீடுகள் ஓடு, சிமெண்ட் ஆஸ்பெஸ்டாஸ் ஆகியவற்றால் அமைக்கப்பட்டு இருந்தது.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவியது. இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் நாகராஜ், சரஸ்வதி, தங்கவேல், ரவி, மாரியம்மாள் ஆகியோர் வீடுகள் எரிந்து சேதம் அடைந்தது.
தீ விபத்தில் அங்கிருந்த வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மொபட், 3 பவுன் நகை, கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. சேத மதிப்பு ரூ. 1.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X