என் மலர்
செய்திகள்

சிற்ப பட்டறைக்குள் அரசு பஸ் புகுந்தது: 30 பேர் உயிர் தப்பினர்
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சிற்ப பட்டறைக்குள் அரசு பஸ் புகுந்த விபத்தில் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மாமல்லபுரம்:
பூம்புகாரில் இருந்து சென்னைக்கு பாண்டிச்சேரி டிப்போ அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. கடலூரை சேர்ந்த டிரைவர் ராஜி ஓட்டி வந்தார். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இன்று அதிகாலை மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த சிற்ப பட்டறைக்குள் புகுந்தது. பின்னர் அருகில் இருந்த பழைய இரும்பு கடைக்குள் புகுந்து நின்றது.
கடைக்குள் படுத்திருந்தவர்களும், பயணிகளும் அலறினார்கள். டிரைவரும், நடத்துனரும் சுதாரித்து பஸ்ஸின் அவசர வழியை திறந்து பயணிகளை வெளியேற்றினர். விபத்து நடந்த கடைக்குள் படுத்திருந்த அப்பாஸ் கால் ஒடிந்து உயிருக்கு போராடிய நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
டிரைவர் கண்ணாடி துகள்கள் பட்டு காயமடைந்தார். அங்கிருந்த உயர் அழுத்த மின்கம்பத்தில் பஸ் மோதாததால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
பூம்புகாரில் இருந்து சென்னைக்கு பாண்டிச்சேரி டிப்போ அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. கடலூரை சேர்ந்த டிரைவர் ராஜி ஓட்டி வந்தார். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இன்று அதிகாலை மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த சிற்ப பட்டறைக்குள் புகுந்தது. பின்னர் அருகில் இருந்த பழைய இரும்பு கடைக்குள் புகுந்து நின்றது.
கடைக்குள் படுத்திருந்தவர்களும், பயணிகளும் அலறினார்கள். டிரைவரும், நடத்துனரும் சுதாரித்து பஸ்ஸின் அவசர வழியை திறந்து பயணிகளை வெளியேற்றினர். விபத்து நடந்த கடைக்குள் படுத்திருந்த அப்பாஸ் கால் ஒடிந்து உயிருக்கு போராடிய நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
டிரைவர் கண்ணாடி துகள்கள் பட்டு காயமடைந்தார். அங்கிருந்த உயர் அழுத்த மின்கம்பத்தில் பஸ் மோதாததால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Next Story






