என் மலர்
செய்திகள்

சீர்காழி பகுதியில் திடீர் மழை
சீர்காழி பகுதியில் திடீரென பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சீர்காழி:
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை பெய்தது. அதன்பிறகு ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்தது.
இதற்கிடையே இரவு, மற்றும் காலை நேரங்களில் கடும் பனிபொழிவு ஏற்பட் டது. இதனால் பொது மக்கள் கடுங்குளிரால் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் நேற்று இரவு மழை பெய்தது.
நள்ளிரவில் சுமார் 1½ மணி நேரம் மழை பெய்தது. இன்று காலையில் லேசான தூறல் மழை பெய்தது.
சீர்காழி பகுதியில் திடீரென பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story






