என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரீட்ச்சம் பழத்தில் தங்கம் கடத்தியர் சென்னை விமான நிலையத்தில் கைது
    X

    பேரீட்ச்சம் பழத்தில் தங்கம் கடத்தியர் சென்னை விமான நிலையத்தில் கைது

    சென்னை விமான நிலையத்துக்கு சவுதியில் இருந்து வந்த விமானத்தில் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ரூ. 1,16 கோடி மதிப்புள்ள தங்க கம்பிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சவுதி அரேபியா ஜெட்டாவில் இருந்து ரைபி சையத்(43), என்பவர் குவைத் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தடைந்தார்.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனையில் ரைபி சையத் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அவனிடம் நடத்திய சோதனையில் 3.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    39 தங்க கம்பிகளை பேரீட்ச்சம் பழம் பெட்டியில் மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரைபி சையத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க கம்பிகளின் மதிப்பு 1,16 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    இந்திய பாஸ்போர்ட் மூலம் சவுதியில் இருந்து சென்னைக்கு சட்டவிரோதமாக தங்க கம்பி கடத்தி வந்த ரைபி சையத்தை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×