search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    பெரம்பலூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    பெரம்பலூரில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தானியங்கி துணை மின் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (ஜன.30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், பழைய பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்கு சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை, அண்ணா நகர்,

    கே.கே. நகர், அபிராம புரம், வெங்கடேசபுரம், பாலம்பாடி மற்றும் கிராமிய பகுதிகளான பீல்வாடி, அசூர், சிறுகுடல், சித்தளி, அருமடல்,செங்குணம், கீழப் புலியூர், கே.புதூர், எஸ்.குடிகாடு, இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, எளம் பலூர் மற்றும் சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது. #tamilnews
    Next Story
    ×