search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூரில் வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    வில்லியனூரில் வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை

    வில்லியனூரில் வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் ஆனந்தம்மாள் சத்திரத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் மணிமேகலை (வயது 18). இவர் அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அவர் திடீரென வாந்தி எடுத்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த பழனிசாமி மணிமேகலையை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்தபோது மணிமேகலை வி‌ஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலையன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×