என் மலர்
செய்திகள்

வைரமுத்து பிரச்சினையில் வன்முறையை தூண்டி விடுகிறார்கள்: திருமாவளவன்
வைரமுத்து பிரச்சினையில் ஜீயர் மோசமான வன்முறையை தூண்டி விடுகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி நீரை திறந்து விடக்கோரி விவசாயிகள் நடத்தும் ரெயில் மறியல் போராட்டத்தில் இன்று கலந்து கொள்கிறோம். காவிரி நீரை பெற தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
பஸ் கட்டணம் மற்ற மாநிலங்களை விட குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழ்நாடு பல விஷயங்களில் பின் தங்கி உள்ளது.
தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தை பங்கேற்கும் கூட்டத்திற்கு பின்னர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்.
இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டம் கொடூரமானது. அது இந்திய அரசுக்கு விடப்படும் சவால். இதில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும். இதற்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக இயற்றப்படும் இந்த சட்டத்தை உடனடியாக இலங்கை அரசு திரும்ப பெற வேண்டும். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், நேரடியாக பிரதமரை சந்தித்து பேச வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் பேச்சு மோசமாக உள்ளது. காவிகள், காவி உடை அணிந்தவர்கள் அனைவரையும் நல்வழியில் நடத்துவார்கள். அவர்கள் அமைதி வழிகாட்டுவார்கள் என்று நினைத்தால் வைரமுத்து பிரச்சினையில் மோசமான வன்முறையை தூண்டி விடுகிறார்கள்.

வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் மன்னிப்பு கேட்கவும் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி நீரை திறந்து விடக்கோரி விவசாயிகள் நடத்தும் ரெயில் மறியல் போராட்டத்தில் இன்று கலந்து கொள்கிறோம். காவிரி நீரை பெற தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
பஸ் கட்டணம் மற்ற மாநிலங்களை விட குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழ்நாடு பல விஷயங்களில் பின் தங்கி உள்ளது.
தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தை பங்கேற்கும் கூட்டத்திற்கு பின்னர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்.
இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டம் கொடூரமானது. அது இந்திய அரசுக்கு விடப்படும் சவால். இதில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும். இதற்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக இயற்றப்படும் இந்த சட்டத்தை உடனடியாக இலங்கை அரசு திரும்ப பெற வேண்டும். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், நேரடியாக பிரதமரை சந்தித்து பேச வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் பேச்சு மோசமாக உள்ளது. காவிகள், காவி உடை அணிந்தவர்கள் அனைவரையும் நல்வழியில் நடத்துவார்கள். அவர்கள் அமைதி வழிகாட்டுவார்கள் என்று நினைத்தால் வைரமுத்து பிரச்சினையில் மோசமான வன்முறையை தூண்டி விடுகிறார்கள்.

வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் மன்னிப்பு கேட்கவும் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
Next Story






