என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி பஸ் கவிழ்ந்தது: 15 ஊழியர்கள் படுகாயம்
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி பஸ் கவிழ்ந்தது: 15 ஊழியர்கள் படுகாயம்

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ராமபுரத்தில் கல்லூரி பஸ் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி இயங்கி வருகிறது. திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து பணிபுரியும் ஊழியர்களை கல்லூரி பஸ் மூலம் இன்று காலை ஏற்றி வந்தனர். பஸ்சில் 30 பெண்கள் உள்பட 40 பேர் இருந்தனர்.

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ராமபுரம் என்ற இடத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அவர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

    Next Story
    ×